Powered by Blogger.

பாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை

Written By We Are Anonymous on Sunday, November 15, 2015 | 10:02 PM


பாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப்பு துப்பாக்கிச் சண்டை காட்சிகள் வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.

பாரிஸ் நகரின் பாட்டகிலான் தியேட்டரில் நடந்த இசை நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.அப்போது அவர்களுடன் கலந்து இருந்த தீவிரவாதிகள் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் தியேட்டரின் வெளிப்புறம் இருந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

அந்த பரபரப்பு வீடியோ இங்கே…

              

பெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….??

Written By We Are Anonymous on Sunday, October 25, 2015 | 9:15 PM



பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்.

டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு??

பெண் :- என் கணவர் டெய்லிகுடிச்சிட்டு வந்து என்ன அடிக்கிறார் டாக்டர்.

காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்:இனிமே உன் கணவன் குடிச்சிட்டு வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ. முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளே வச்சிறு. அடுத்த வாரம் என்னை வந்து பார்

ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்.

பெண் :- நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்….!

டாக்டர் :- நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குதான் இந்த ஐடியா என்றார்.

பெண்…..!

சொய்ஸா கொலை தொடர்பில் சி.சி.டீ.வி. தடயங்கள்



பிரபல கராட்டே வீரரும் இரவு விடுதியின் சொந்தக் காரருமான வசந்த சொய்ஸா கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவரது கொலை தொடர்பான தடயங்கள் சீ.சீ.டி.வி. ஊடாகப் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் ‘கடபணஹ’ பகுதியிலுள்ள இவரின் இரவு விடுதியில் நேற்று முன்தினம்(24) இரவு 11.45 மணியளவில் தலைக் கவசங்களுடன் வந்த கும்பலொன்று ஆயுதங்களினால் இவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வடமத்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ விஜே குணவர்தன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பத்மசிறி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதுல வீர சிங்க ஆகியோரின் உத்தரவில் தொடர்ந்தும் மேலதிக விசாரணை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யுத்த காலத்தில் பாதுகாப்புக்கே பங்கர் அமைக்கப்பட்டது-மஹிந்த ராஜபக்ஷ



பாதுகாப்பு நோக்கத்துக்காகவே நிலத்துக்குக் கீழ் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெறும் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே இந்த நிலத்துக்குக் கீழ் அறைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் நேற்று கொழும்பு அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கூறியுள்ளார்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையுடன் இணைந்ததாக நிலத்துக்குக் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அதிசொகுசு மாளிகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.



இந்த கட்டடம் நிலத்துக்குக் கீழால் இரண்டு மாடிகளும், நிலத்துக்கு மேலால் இரண்டு மாடிகளும் அமையப் பெற்றுள்ளன. ஒரு மாடியின் பரப்பளவு 3 ஆயிரம் சதுர அடிகளாகும். நான்கு மாடிகளும் 12 ஆயிரம் சதுர அடிகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நான்கு மாடிகளுக்கும் இலத்திரனியல் இறக்கு ஏறு தளங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், முழு மாளிகையும் குளிரூட்டப்பட்டு 24 மணி நேரமும் இடைவிடாது செய்பட்டு வந்துள்ளது.

இந்த கட்டிடத்திலிருந்து கொழும்பு துறைமுகம் வரையில் சுரங்கப் பாதையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப்பணிகள் முடிவடையாது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் நிர்மாணப்பணிகள் இராணுவத்தினரைக் கொண்ட விசேட படைப் பிரிவு ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் சுவர்கள் ஒவ்வொன்றினதும் அகலம் 4 அடிகள். இதன் சுவர்களுக்கு பலமான கம்பிகள் போடப்பட்டுள்ளன. கூரைக்குப் போடப்பட்டுள்ள கொங்கிரீட்டின் அகலமும் 4 அடிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கட்டிடத்தில் போடப்பட்டுள்ள தளபாடங்கள் யாவும் இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண் கலங்க வைத்தது உண்மை இது!!!

ஒருநாள் தாய் தன் மகனிடம்

கேட்கிறாள்..... மகனே..நான் கண் தெரியதவளாய் இருந்தால் நீ என்ன செய்து இருப்பாய் என்று...?

அதற்கு மகன் நான், சிகிச்சைக்காக உலகின் சிறந்த கண் மருத்துவ டாக்டரை
நாடி இருப்பேன் என்று பதில்
கூறினான்.....

சிறிது நேரம் அதே கேள்வியை பிறகு அவரது தாயிடம் மகன் கேட்டு பார்த்தான்

"நான் கண் தெரியாதவனாய்
இருந்தால் நீங்கள் என்ன செய்து இருந்திருப்பிர்கள்"
என்று.

அதற்கு அந்த தாய்
பொறுமையாக பதில்
கூறினாள்.....

நான் என் இரண்டு கண்களையும் உனக்கு தானமாக கொடுத்திருப்பேன் " என்று.....

பார்த்தீர்களா தாய்ப்பாசம் தாய்க்கு நிகராக
யாரும் இல்லை

நிந்தவூர் கடலில் வரலாறு கானாத மீன்கள்….!! அச்சத்தில் மக்கள்…?

நிந்தவூர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற அனைத்து கரைவலை தோணிகளுக்கும் அதிகளவிலான கீரி மீன்கள் பிடிபட்டமை குறிப்பிட்டத்தக்ககு.

ஒரு கூடை கீரீ மீன் சுமார் 7000/=, 8000/= ரூபாய்க்கு கரைவலைக்காறர்கள் விலைகூறி விற்றனர். பலரும் பலவாறு பார்க்கின்றனர் காரணம் இக்காலப்பகுதியில் இப்படி மீன்கள் பிடிபட்டாலும் இயற்கையின் சீற்றமா என மக்கள் அஞ்சும் நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது





நிலக்கீழ் மாளிகை எனது தேவைக்காக அமைக்கப்படவில்லை: மஹிந்த






ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய நிலக்கீழ் மாளிகை தமது சொந்த தேவைக்காக அமைக்கப்பட்டதல்லவென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டிடம், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யுத்த காலத்தில் பாதுகாப்பு குழு கூட்டத்தையும் குறித்த நிலக்கீழ் மாளிகையிலேயே தாம் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் நுட்பமான அதிநவீன முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட குறித்த மாளிகை தொடர்பில், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தியதையடுத்து, அதனை பார்வையிட நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் அழைத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-

214 ஓட்டங்களால் இந்தியா படுதோல்வி : தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 214 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 438 ஓட்டங்களைப் பெற்றனர்.

அவ்வணியின் அம்லா 23 ஓட்டங்களையும், டீ கொக் 109 ஓட்டங்களையும், டூ ப்லெஸிஸ் 133 ஓட்டங்களையும், அணித்தலைவர் டி வில்லியஸ் 109 ஓட்டங்களையும் குவித்தனர்.

439 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஏமாற்றத்தையே கொடுத்தனர். அவ்வணி சார்பாக ரோகித் சர்மா, 16 ஓட்டங்களுடனும், கோலி 7 ஓட்டங்களுடனும் ஆட்மிளந்தனர்.

எனினும் சற்று பங்களிப்பு செய்த தவான், 60 ஓட்டங்களையும் ரகானே 87 ஓட்டங்களையும் டோனி 27 ஓட்டங்களையும் பெற்றனர. ஏனைய வீரர்கள் எவரும் பிரகாசிக்கவில்லை. பின்னர் 36 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 214 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுக்களையும், ஸ்டெயின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாபிரிக்கா 3-2 என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக டீ கொக்கும், தொடர் நாய்கனாக டி வில்லியஸும் தெரிவானார்கள்.

நோர்வேயில் இருந்து ஆட்களை சேர்க்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

நோர்வேயில் உள்ள அகதி முகாம்களில் இருந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நகரங்களை நோக்கி செல்லும் அகதிகள், தீவிரவாதிகளாக ஆக்கப்படலாம் என அதிகாரிகள் ஏற்கனவே தங்கள் கவலையை தெரிவித்திருந்த நிலையில், இத் தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வரவேற்பு மையங்கள் மற்றும் அடைக்கலம் கேட்டு வந்தவர்களை தீவிரவாதிகள் அணுகியதற்கான அறிகுறிகள் தென்படுவதாக நோர்வே பொலிஸ் பாதுகாப்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Test Footer 1

எச்சரிக்கை..!! கிறீம் கிறெக்கர் பிஸ்கட் ஆபத்து : அதிர்ச்சி வீடியோ

தயவுசெய்து ஆதார வீடியோவை பார்ப்பதோடு நிறுத்திவிடா...

Test Footer

Test Footer 2

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Rajarata Voice - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger